July 30, 2009

இக்ஷிணி தேவதைகள் சொல்லும் "இந்த நாள் இனிய நாள்"

வாக்கு-பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது 'co-incidence' ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் ஏற்பட்ட்டு விட்டால் அவன் மஹான் அல்ல. பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டு.

Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும்। அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும்। இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் வீட்டில் பாட்டிகள், பெரியவர்கள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள். இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம் நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும்। நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.

"ஒழிந்து போ, சனியனே" போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது. பத்துத் தொலைகாட்சித் தொடர்களில் எட்டு தொடர்கள் அசுபமாக பேசுவதை அல்லது உச்சகட்ட விரோதம் தொனிக்கும் வார்தைகளை உமிழ்வதைத் தான் பொழுது போக்காக்கி நமக்கு வழங்குகின்றன. இப்படிப்பட்ட சொற்களை அதிகம் கேட்பதால், அதைச் சுற்றி அல்லது அதனைச் சார்ந்தே நம் எண்ண ஓட்டமும் நினைப்பும் அமைந்து விடுகிறது. நம்மைச் சுற்றி "aura" குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். இதைத் தான் "தீயதை பார்க்கவும், பேசவும், கேட்கவும்" கூடாது என்று குரங்கு நமக்கு உணர்த்துகிறது.

இஷிணி தேவதைகள் போன்ற personfications கேலிக்குறியதாகவே கருதினாலும், விஞ்ஞான்ம் கூறும் கருத்தையொத்து "we become what we (think/utter/aspire)" நடைபேறும் சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதால், நடத்தையும், பேச்சும், செயலும் மட்டும் அல்ல எண்ணமும் நல்லனவாக அமைவது அவசியம். வீடுகளில் சுபவார்த்தைகள் தொனிக்கச் செய்ய ஸ்லோகங்களை ஒலிக்கச் செய்கிறோம். ஐந்து வேளை தொழுகை நடத்துகிறோம. இறைவனை பிரார்த்திக்கிறோம். பத்தில் ஒரு வேண்டுதல் உலக நலன் கருதியும், பிறருக்காகவும் எண்ணங்கள் சிந்தப்படுகின்றன. அந்த எண்ண அலைகள் "postive vibrations" உண்டு பண்ணக்கூடியவை.

இன்றைக்கும் என்றைக்கும் இனிய நாளாக அமைவது நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது. அதை வலுவாக்குவதற்குச் சாதகமான சுற்றுப்புற சூழலை நாமே உருவாக்கிக்கொள்ள வெண்டும்.

8 comments:

  1. வாங்க மேடம்.ரொம்ப நாளாச்சு.

    பதிவு நல்லா இருக்கு.கஷ்டம் வந்தால் கூட எரிச்சலில் கெட்ட வார்த்தைச் சொல்லாமல் “அட ராமா” “சிவசிவ”
    ”முருகா” என்றும் தும்மும்போது கூட
    கடவுள் பேரைச் சொலவதுண்டு அந்தக் காலத்தில்.

    இப்போது?

    ReplyDelete
  2. வாங்க ரவிஷங்கர்.

    நெடுநாள் கழித்து வந்தாலும் நினைவோடு என் பதிவை படித்து கருத்து கூறுவதற்கு மிக்க நன்றி :)

    (மறுபடியும் pwd மறந்து போய்விட்டேன். என் பதிவில் நுழைய முடியவில்லை. அப்புறம் sheer laziness என்பது இன்னொரு காரணம். ) நன்றி அடிக்கடி வாங்க.

    I need to catch up with interesting things in ur blog.

    ReplyDelete
  3. ஷக்தி மேடம்...

    வணக்கம்... இப்போதுதான் முதன்முதலில் தங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்....

    இட்ஷிணி தேவதைகள் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய "என் இனிய யட்சினி" படித்தது நியாபகம் வந்தது.... உடனே பதிவையும் படித்து விட்டேன்....

    //இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம் நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும்। நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்//

    இது உண்மைதான் என்றெல்லாம் எழுதி இருப்பார்..... கிடைத்தால் படியுங்கள்....


    //இஷிணி தேவதைகள் போன்ற personfications கேலிக்குறியதாகவே கருதினாலும், விஞ்ஞான்ம் கூறும் கருத்தையொத்து "we become what we (think/utter/aspire)" நடைபேறும் சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதால், நடத்தையும், பேச்சும், செயலும் மட்டும் அல்ல எண்ணமும் நல்லனவாக அமைவது அவசியம். வீடுகளில் சுபவார்த்தைகள் தொனிக்கச் செய்ய ஸ்லோகங்களை ஒலிக்கச் செய்கிறோம். //

    மிக சரியே.... நாம் நல்லதே நினைப்போம்.... நல்லதே நடக்கும்... இதுதானே வாழ்வியல் தத்துவம்!!

    நேரம் கிடைக்கும் போது, என் வலைப்பக்கங்களுக்கும் வந்து ஒரு ஷார்ட் விசிட் அடிங்களேன்....

    www.edakumadaku.blogspot.com

    www.jokkiri.blogspot.com

    நன்றி ஷக்தி......

    ReplyDelete
  4. //Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும்।//

    இது தான் விஷயமே!.. ஒரு மாதம் முன்பு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.. அவர் வீட்டில் தான். அடுத்த நாள், அவர் புதுக்கடை திறப்பு நாள். அதற்குத் தான் என்னை அழைத்திருந்தார். அவர் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், "ஆண்டவன் ஆசிலே இந்த பிசினெஸ்ஸில் நான் தேறிட்டேன்னா.." என்று சொல்லிக் கொண்டே, அனிச்சையாக ரிமோட் எடுத்து டிவியை அவர் உசுப்ப,
    "நல்லது தான் நடக்கும்.. போய் வேலையைப் பார்" என்று ஏதோ சிரீயலில் வசனம் வந்தது.
    அப்பொழுது நண்பர் முகம் ஜொலித்த ஜொலிப்பு இருக்கே...
    நான் இன்னும் அந்த நிகழ்ச்சியையும் காட்சியையும் மறக்கலே..
    உங்களது இந்தப் பதிவைப் படித்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.. கொட்டி விட்டேன்.

    ReplyDelete
  5. நன்றி கோபி.
    நிச்சயம் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்.

    வாங்க ஜீவி,
    உண்மை தான். இப்படிப்பட்ட எதிர்பாராத நற்சொற்கள் நம்மை எப்பேர்பட்ட ஆனந்தத்தில் ஆழ்த்திவிடுகிறது!

    எனக்கு பெண் பிறக்கும் அன்று அதிகாலையில் தொலைக்காட்சியை திருப்பியவுடன் கேட்ட தொடங்கிய முதல் பாடல்

    "என்ன தவம் செய்தனை யஷோதா"

    ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டேன்.

    ReplyDelete
  6. //எனக்கு பெண் பிறக்கும் அன்று அதிகாலையில் தொலைக்காட்சியை திருப்பியவுடன் கேட்ட தொடங்கிய முதல் பாடல்

    "என்ன தவம் செய்தனை யஷோதா"

    ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டேன்.//

    ப‌டிக்க‌ற‌ என‌க்கே ரொம்ப‌ நெகிழ்ச்சியா இருக்கு.... உங்க‌ளுக்கு எப்ப‌டி இருந்திருக்கும்னு புரிய‌ற‌து....

    ReplyDelete
  7. நல்ல பதிவு..

    இட்சிணி தேவதைகள் பற்றி நானும் கேட்டதுண்டு..

    \\இன்றைக்கும் என்றைக்கும் இனிய நாளாக அமைவது நம் எண்ணத்திலும் செயலிலும் இருக்கிறது.\\

    உண்மையான வரிகள்..

    நல்லதையே பேசுவோம், நல்லதையே கேட்போம், நல்லதையே செய்வோம்..

    ReplyDelete
  8. நன்றி கோபி, கலாட்டா அம்மணி !

    ReplyDelete