August 12, 2010

திரையிசை பயணங்கள் - 2

படம்: நாடோடி ராஜா
பாடல்: வைரமுத்து
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள் : எஸ்.பி.பி / எஸ். ஜானகி
வருடம்: 1982

___
Courtesy
http://www.dhool.com/sotd2/645.html

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே..ஆஅ....
.
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூரம்
இவள் ஒரு தாவணி மேஹம்
இதயம்..
அமுதில்..
தொடுகையில்
.
பார்வை வேறானது இங்கு
வியர்வை ஆறானது
பார்வை வேர்-ஆனது இங்கு
வேர்வை ஆறானது
.
சேலை தொடு மாலை இடு
இளமையை தூது விடு- பாடு (சந்தன)
.
என்னோடு வந்தாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி தாகம்
கரும்பும்...
இவளை ..
விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை - இனி
தேனில் ஆராதனை
கூந்தலிலே
போர்வையிடு
மன்மத சேதி கொடு - பாடு (சந்தன)
.
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன் மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஆஹாஹாஹா






___
பார்வை வேறானாது / பார்வை வேர் - ஆனது (பிரித்தும் பொருள் கொள்ளலாம்) போன்ற பாடல் வரிகள் வைரமுத்துவின் முத்திரைக்குச் சான்று. ஷங்கர்-கணேஷின் வீணை இடையிசையில் நாட்டை ராகத்தின் குதூகலிப்பு (மஹா கணபதிம் பாடலின் தொனி) 'விடிந்ததும் காய்ந்து விடும்' என்ற கடைவரியில் ஸ்வர வேறுபாட்டுடன் முடித்திருப்பது மகுடம். எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி குழைவும் லயிப்பும் பாடலை அலங்கரித்திருக்கிறது.

No comments:

Post a Comment