August 17, 2010

குட்டிக் குட்டி கிறுக்கல்கள் (2)

இன்றைய புத்தன்

போதுமென்று பொங்கி வழிந்தும்
புது ஊற்றாய் பெருகும் ஆசை - சலனம்
ஏதுமின்றி திகழும் புத்தனுக்கும்
போதிமரமொன்றும் கிடைப்பதில்லை
கலிகாலப் பேரிருளில்
கால் தடுக்கும் இடமெங்கும் மின்னொளி சுரந்தும் (மன)
வலி-யிருள் நீங்க ஒளிகூட்ட
போதிக்கும் குரு-சாமிக்கும்
ஜோதியொன்றும் ஒளிர்வதில்லை।

- ஷக்திப்ரபா

2 comments:

  1. //கலிகாலப் பேரிருளில்
    கால் தடுக்கும் இடமெங்கும் மின்னொளி சுரந்தும் (மன)
    வலி-யிருள் நீங்க ஒளிகூட்டி
    போதிக்கும் குரு-சாமிக்கும்
    ஜோதியொன்றும் ஒளிர்வதில்லை।//

    ரொம்ப நல்லா வந்திருக்குங்க ஷக்திப்ரபா :)

    ReplyDelete